வடமதுரை

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

தொகு

வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டுக்கல்லிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E / 10.47; 78.08 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,434 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[2] இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது.

அரசியல்

தொகு

இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக திருமதி. நிருபாராணி கணேசன் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.

ஆதாரங்கள்

தொகு
  1. "Vadamadurai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் சனவரி 30, 2007.
  2. Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  3. வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்


"https://ta.wiki.x.io/w/index.php?title=வடமதுரை&oldid=4182571" இலிருந்து மீள்விக்கப்பட்டது