பாலையவனம் பாளையம்
'பாலையவனம் பாளையம்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், "அறந்தாங்கி" பகுதி 'பாலையூர்' என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "வணங்கமுடி பண்டாரத்தார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/2f/Duraiarasan.jpg/220px-Duraiarasan.jpg)
வரலாறு
தொகு1879 ஆம் ஆண்டு, இராமசந்திர விஜய அருணாசல வணங்காமுடிப் பண்டாரத்தார் கீழ் 52 கிராமங்கள் இருந்தன (18954 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 8767 ரூபாய் 12 அணா ஆகும்.[2][3]
சுனையக்காட்டில் கிணற்று (சுனை) ஒன்றினை, விஜய அருணாசல வணங்காமுடி பண்டாரத்தார் பிரதிஷ்டை செய்தார் என்று, கி. பி. 1687 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.[1]
சிற்றம்பல கவிராயர் அவர்கள், ஜமீன் ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தின் மீது பாடல்கள் பாடி பரிசில்கள் பெற்றுள்ளார்.[1]
இவர்களின் மிகவும் பழமையான அரண்மனை முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[4] இவர்கள் அறந்தாங்கி தொண்டைமான் வம்சாவளியில் வந்தவர்கள் ஆவார்கள்[5].
ஜமீன் அ. துரையரசன் வணங்காமுடி பண்டாரத்தார் அவர்கள் பாலைவனம் ஜமீன்களில் இறுதியானவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "பழங்காலக் கல்வெட்டுகள்". தினமணி.
- ↑ கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. 91.
- ↑ மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. pp. 319.
- ↑ "ஜமீன் அரண்மனை". தமிழ்அகம். Archived from the original on 2020-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
- ↑ MANUAL OF PUDUKKOTTAI STATE VOL II. 2002. pp. 721.