நெய்யூர்
நெய்யூர் (Neyoor) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும். இதன் அருகில் இரணியல் தொடருந்து நிலையம் உள்ளது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/44/Neyoor_Girl%27s_Boarding_School_%28p.19%2C_1891%29_-_Copy.jpg/250px-Neyoor_Girl%27s_Boarding_School_%28p.19%2C_1891%29_-_Copy.jpg)
இங்கு பிரபலமான நெய்யர் தேவாலயம் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம் உள்ளது.
அமைவிடம்
தொகுநெய்யூர், நாகா்கோவிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; கன்னியாகுமரியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நெய்யூர் பேரூராட்சியின் கிழக்கே திங்கள்நகர் 1 கி.மீ. தொலைவிலும் மேற்கே கருங்கல் 6 கி.மீ. தொலைவிலும் வடக்கில் அழகியமண்டபம் 6 கி.மீ. தொலைவிலும் தெற்கில் குளச்சல் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகுஇந்தப் பேரூராட்சியானது 5.23 சதுர கிலோ மீட்டர் பரப்பில், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி, 3430 வீடுகளும், 12917 மக்கள்தொகையும் கொண்டது. [3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Neyoor Girl's Boarding School". Chronicles of the London Missionary Society. 1890. https://ia801406.us.archive.org/11/items/chroniclelondon00unkngoog/chroniclelondon00unkngoog.pdf. பார்த்த நாள்: 2 November 2015.
- ↑ நெய்யூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ நெய்யூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Neyyoor Population Census 2011
- ↑ Neyyoor Town Panchayat