சாமுண்டி தேவ நாயகர்

சாமுண்டி தேவ நாயகர் என்பவர் புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரையெழுதிய உரையாசிரியர்களில் ஒருவராவார்.[1] இவர் மாகறல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவ்வூர், சயங்கொண்ட சோழ மண்டலத்து மேற்கானாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டொன்று கூறுவதாகச் செந்தமிழ்த் தொகுதி கூறுகின்றது.

சாமுண்டி தேவ நாயகர்
பிறப்புமாகறல்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபுறப்பொருள் வெண்பாமாலைக்கு உரை இயற்றியது

சயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கானாட்டு

மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர்

செந்தமிழ்த் தொகுதி -1, (45-46)


"கிழார்" என வருவதைக் கொண்டு இவர் வேளாண் குடியினர் எனக் கருதப்படுகிறது. இவரது காலம் பொ.ஆ.13 அல்லது பொ.ஆ.14-ம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=சாமுண்டி_தேவ_நாயகர்&oldid=4206409" இலிருந்து மீள்விக்கப்பட்டது