காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் (Kanchipuram Ulagalantha Perumal Temple) காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காக அமைந்துள்ள ஒரு கோயிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுருவம் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோயிலிலுள்ளேயே 108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திருவூரகம், திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.[1][2][3]


திருவூரகம்

பிறபெயர்கள்: காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
மூலவர்: உலகளந்த பெருமாள், திருவூராகத்தான், திரிவிக்ரமன்
தாயார்: அமிர்தவல்லி நாச்சியார்
உத்சவர்: திருலோகநாதன்
உத்சவ தாயார்: படிதாண்டா தாயார்
புஷ்கரணி: நாக தீர்த்தம், சேஷ தீர்த்தம்
விமானம்: சார ஸ்ரீகர விமானம்
பாசுரம்: திருமங்கை (4), திருமழிசை (2)
அமைவிடம்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா


திருப்பாடகம்

பிறபெயர்கள்: பாண்டவ தூத பெருமாள் கோயில்
மூலவர்: பாண்டவ தூதர்
தாயார்: சத்யபாமா, ருக்மணி
உத்சவர்: பாண்டவ தூதர்
உத்சவ தாயார்: சத்யபாமா, ருக்மணி
புஷ்கரணி: மத்ஸ்ய புஷ்கரணி
விமானம்: பத்ர விமானம், வேதா கோடி விமானம்
பாசுரம்: பூதத்தாழ்வார் (1), பேயாழ்வார் (1), திருமங்கை (2), திருமழிசை (2)
அமைவிடம்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

தல புராணம்

தொகு
 

ஒரு அந்தணச் சிறுவனாக அவதரித்த விஷ்ணு, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான். நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும், மண்ணையும் இரு அடிகளால் அளந்துவிடுகிறார். மூன்றாம் அடி வைக்க இடமில்லாததால், அதனை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாமல் மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கத் விஷ்ணு வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம், பாடகம் என வழங்கப்படுகிறது. இந்த நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

கோயிலின் அமைப்பு

தொகு

கோயிலின் பரப்பளவு 60,000 சதுர அடிகள் (5,600 m2) ஆக உள்ளது. இதன் முதன்மையான ராஜ கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. பல்லவத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் நகர வடிவமைப்பு இக்கோயிலை மையமாகக் கொண்டு தாமரை வடிவில் அமைந்துள்ளது.

திருவுருவின் அமைப்பு

தொகு

விஷ்ணுவின் திருவுருவத்திற்கு திரிவிக்ரமன் என்பதாக பெயர் வழங்கப்படுகிறது. 30 அடி உயரமுள்ள நீண்ட விஷ்ணுவின் திருவுருவம் சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லாமல், வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்குரிய சிறப்பாகும். இந்த திருவுருவத்தின் இடது கால் உடலுக்கு செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால் மகாபலி சக்கரவர்த்தியின் தலை மீது அழுத்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் விரிந்திருப்பதும் சிறப்பாகும்.

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Parmeshwaranand, p. 1337
  2. "Sri Thiruvikrama swamy temple". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2014-01-01.
  3. Aiyar, Indira S (1 September 2013). "Visnu Temples of Kancipuram". Marg, A Magazine of the Arts. https://www.highbeam.com/doc/1G1-346532518.html. பார்த்த நாள்: 26 April 2018. 

வெளி இணைப்புகள்

தொகு