எருசலேம் முற்றுகை (கிமு 587)
கிமு 589 இல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நேபுகாத்னேச்சரினால் எருசலேம் மீது முற்றுகை நடத்தப்பட்டு, எருசலம் நகரத்தினதும் அதன் கோயிலினதும் அழிவுக்கு இட்டுச் சென்றது.
எருசலேம் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
யூத–பாபிலோன் போர் (கிமு 601–586) பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
யூத அரசு | பபிலோனியா பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
செதேக்கியா | இரண்டாம் நெபுகாத்நேசர் | ||||||
பலம் | |||||||
மிகவும் சில | தெரியாது | ||||||
இழப்புகள் | |||||||
பலர் வெட்டப்பட்டனர், 4,200 பேர் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர் | தெரியாது |
முற்றுகை
தொகுகிமு 597 முற்றுகையைத் தொடர்ந்து, புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், யூதேயாவின் அரசனாக 21 வயது செதேக்கியாவை நியமித்தார். ஆயினும் செதேக்கியா பாபிலோனுக்கு எதிராக புரட்சி செய்து, எகிப்திய பாரவோனுடன் கூட்டுச் சேர்ந்தார். இதனால் பதிலுக்கு யூத அரசு மீது நேபுகாத்னேச்சர் படையெடுத்து,[1] கிமு 589 திசம்பரில் எருசலேம் மீது முற்றுகையிட்டார்.