என். ஒய். அனுமந்தப்பா
இந்திய அரசியல்வாதி
என். ஒய். அனுமந்தப்பா (N. Y. Hanumanthappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். கர்நாடகாவின் சித்ரதுர்கா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
நீதிபதி என். ஒய். அனுமந்தப்பா N.Y. Hanumanthappa | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், பதினான்காவது மக்களவை | |
பதவியில் 2004-2009 | |
முன்னையவர் | சசி குமார் (கன்னட நடிகர்) |
பின்னவர் | சனார்த்தன சுவாமி |
தொகுதி | சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி |
18th தலைமை நீதிபதி of ஒரிசா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 17 பிப்ரவரி 2001 – 24 செப்டம்பர் 2001 | |
முன்னையவர் | விசுவநாத் அகர்வால் |
பின்னவர் | பி. கே. பாலசுப்ரமணியன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 செப்டம்பர் 1939 சித்ரதுர்கா, கருநாடகம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | என். ஒய். ஆதிலக்சுமி |
பிள்ளைகள் | 3 மகன்கள் |
வாழிடம் | பெங்களூர் |
As of 25 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அனுமந்தப்பா ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார், முன்னதாக இவர் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றங்களில் பணியாற்றினார்.
அனுமந்தப்பா 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[1]