இராணி ரூபமதி
ராணி ரூப்மதி (Rani Roopmati ) இவர் ஒரு கவிஞரும் மற்றும் மால்வா சுல்தான் பாஸ் பகதூரின் மனைவியுமாவார். மால்வாவின் நாட்டுப்புறக் கதைகளில் ரூபமதி முக்கியமாக இடம் பெறுகிறார். இது சுல்தானுக்கும் ரூபமதிக்கும் இடையிலான அன்பைப் பற்றி பேசுகிறது. ரூபமதியின் அழகு காரணமாக ஆதாம் கான் மாண்டுவை கைப்பற்றத் தூண்டப்பட்டார். ஆதாம் கான் கோட்டையைக் கைப்பற்ற அணிவகுத்துச் சென்றபோது, பாஸ் பகதூர் தனது சிறிய படையுடன் அவரைச் எதிர்த்து தோற்கடிக்கப்பட்டார். ரூபமதி விசமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு இசை, கவிதை, காதல், போர் மற்றும் இறப்பு ஆகியவற்றில் மூழ்கியிருந்த மந்திர காதல் கதையை முடிவுக்குக் கொண்டுவருகிறது. இந்த காதல் ஒரு புராணக்கதையாக சிலர் கருதுகின்றனர். மற்றவர்கள் அதை உண்மை என்றும் கருதுகின்றனர்.
வாழ்க்கை
தொகுஇசையை மிகவும் விரும்பும் பாஸ் பகதூர், மாண்டுவின் கடைசி சுதந்திர ஆட்சியாளராக இருந்தார். பாஸ் பகதூர் ஒருமுறை வேட்டையாட செல்லும்போது, ஒரு கால்நடை மேய்த்துகொண்டிருக்கும் ரூபமதி தனது நண்பர்களுடன் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அவளது மயக்கும் அழகு மற்றும் இனிமையான குரல் இரண்டையும் கண்டு, ரூபமதியை தன்னுடன் தனது தலைநகருக்கு வருமாறு கெஞ்சினார். ரூபமதி தனது அன்புக்குரிய மற்றும் வணக்கத்திற்குரிய நர்மதை நதிக்கு அருகில் ஒரு அரண்மனையில் தான் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மாண்டுவுக்குச் செல்ல ஒப்புக்கொண்டார். இதற்காக மாண்டுவில் ரேவா குந்த் அரண்மனை கட்டப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த முஸ்லீம் இளவரசர் மற்றும் இந்து மேய்ப்பரின் காதல் தோல்விக்கு ஆளானது. முகலாய பேரரசர் அக்பர் மாண்டுவை ஆக்கிரமித்து ரூபமதியையும் பாஸ் பகதூரையும் கைப்பற்ற முடிவு செய்தார். மாண்டுவைக் கைப்பற்ற அக்பர் ஆதாம் கானை படையுடன் அனுப்பினார். பாஸ் பகதூர் தனது சிறிய இராணுவத்துடன் ஆதாம் கானை எதிர்த்தார். சிறந்த முகலாய இராணுவத்திற்கு எந்தப் போட்டியும் இல்லை. மாண்டு எளிதில் வீழ்ந்தது.
பாஸ் பகதூர் உதவி தேடி சித்தோர்காருக்கு தப்பி ஓடினார். ஆதாம் கான் மாண்டுக்கு வந்ததும், ரூபமதியின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தன்னை பிடிப்பதைத் தவிர்ப்பதற்காக இராணி ரூபமதி தன்னைத்தானே விசம் வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு ஒரு காதல் கதை ஒரு முடிவுக்கு வந்தது. [1]
இராணி ரூபமதியின் கவிதைகள்
தொகு1599 ஆம் ஆண்டில், சராப்-உத்-தின் மிர்சாவிடம் பணியிலிருந்த அகமது-உல்-உம்ரி துர்கோமன் என்பவர் பாரசீக மொழியில் இராணி ரூபமதியின் கதையை எழுதினார். அவர் ரூபமதியின் 26 கவிதைகளை சேகரித்து அவற்றை தனது படைப்புகளில் சேர்த்தார். அசல் கையெழுத்துப் பிரதி அவரது பேரன் புலாத் கான் மற்றும் அவரது நண்பர் மிர் ஜாபர் அலி ஆகியோருக்கு 1653 இல் கையெழுத்துப் பிரதியை உருவாக்கியது. மிர் ஜாபர் அலியின் நகல் இறுதியில் டெல்லியின் மெகபூப் அலிக்கு அனுப்பப்பட்டது. 1831 இல் அவர் இறந்த பிறகு டெல்லியின் ஒரு பெண்மணிக்கு அனுப்பப்பட்டது. போபாலின் ஜெமதர் இனாயத் அலி இந்த கையெழுத்துப் பிரதியை அவளிடமிருந்து ஆக்ராவுக்குக் கொண்டு வந்தார். இந்த கையெழுத்துப் பிரதி பின்னர் சி.இ. இலுவார்ட்டை அடைந்து எல்.எம். க்ரம்ப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தி லேடி ஆஃப் தி லோட்டஸ்: ரூப்மதி, மாண்டு ராணி: 1926 ஆம் ஆண்டில் விசுவாசத்தின் ஒரு விசித்திரமான கதை. இந்த கையெழுத்துப் பிரதியில் பன்னிரண்டு தோகாக்கள் எனப்படும் வசன வடிவங்கள், பத்து கவிதைகள் மற்றும் மூன்று ருபமதியின் சவாயே எனப்படும் கவிதை வடிவமும் அடங்கும். [2]
ரேவா குந்த் மற்றும் இராணி ரூபமதியின் அரண்மனை
தொகுரேவா குந்த் என்பது மாண்டுவில் பாஸ் பகதூரால் கட்டப்பட்ட ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது ரூபமதியின் தங்குமிடத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக கட்டப்பட்டது. இன்று, இந்த தளம் ஒரு புனித இடமாக மதிக்கப்படுகிறது. பாஸ் பகதூரின் கட்டிடம் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. மேலும் அதன் விசாலமான முற்றத்தில் அரங்குகள் மற்றும் உயரமான மொட்டை மாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இராணி ரூபமதியின் அரண்மனை இராணுவ கண்காணிப்பு இடமாக மாற்றப்பட்டது. ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த அழகிய அரண்மனையில் இருந்து, இராணி தனது துணை அரண்மனையையும், கீழே நர்மதை நதியையும் பார்க்க முடியும். இராணி ரூபமதியின் இரட்டை அரண்மனை தெற்கு உட்புறங்களில் அமைந்துள்ளது. மேலும் நர்மதை பள்ளத்தாக்கின் அழகிய காட்சியையும் கொடுக்கிறது.
-
இராணி ரூபமதியின் அரண்மனை
-
பாஸ் பகதூரின் அரண்மனை
-
ரேவா குந்த்
குறிப்புகள்
தொகு- ↑ "Rewa kund". Archived from the original on 14 March 2006. பார்க்கப்பட்ட நாள் 20 June 2006.
- ↑ Khare, M.D. (ed.) (1981). Malwa through the Ages, Bhopal: Directorate of Archaeology and Museums, Government of M.P., pp.365-7
நூற்பட்டியல்
தொகு- Explore India: The Official Newsletter of the Ministry of Tourism. Durga Das Publications Pvt. Limited. 2001.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Amiteshwar Ratra (2006). Marriage and Family: In Diverse and Changing Scenario. Deep & Deep Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7629-758-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - M. D. Khare (1981). Malwa Through the Ages: Papers of the Seminar Held at Indore Museum on 7, 8, and 9 February, 1981. Directorate of Archaeology & Museums, Government of M.P.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Seema Suneel (1995). Man-woman relationship in Indian fiction: with a focus on Shashi Deshpande, Rajendra Awasthy, and Syed Abdul Malik. Prestige Books.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sir Thomas Herbert; John Anthony Butler (2012). Sir Thomas Herbert, Bart: Travels in Africa, Persia, and Asia the Great : Some Years Travels Into Africa and Asia the Great, Especially Describing the Famous Empires of Persia and Hindustan, as Also Divers Other Kingdoms in the Oriental Indies, 1627-30, the 1677 Version. ACMRS (Arizona Center for Medieval and Renaissance Studies). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86698-475-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Tiwari, Chandra Kant (1977). "Rupmati 'The Melody Queen of Malwa'". Proceedings of the Indian History Congress 38: 244–249.
- "Afghan architecture in sandstone". The Hindu. 11 May 2018. https://www.thehindu.com/life-and-style/homes-and-gardens/afghan-architecture-in-sandstone/article23852537.ece.
- Chand, Sharmila (7 September 2018). "Monsoon in Mandu". India Today. https://www.indiatoday.in/mail-today/story/monsoon-in-mandu-1334356-2018-09-07.
- "Mandu in Madhya Pradesh is a romantic treasure waiting to be explored". Times Travel. 18 September 2019. https://timesofindia.indiatimes.com/travel/destinations/mandu-in-madhya-pradesh-is-a-romantic-treasure-waiting-to-be-explored/as71184021.cms.