அங்கமளித்தல்
அங்கமளித்தல் என்பது அம்மனை வழிபடுகின்ற சாக்த மதப்பிரிவின் ஒரு வழிபாட்டு சடங்காகும். இந்த சடங்கில் பக்தர்கள், மனித உடல் உறுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ள தகடுகளை வாங்கி கோவிலின் உண்டியலில் செலுத்துகிறார்கள். [1]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/5e/Woman_uruvam_plate_for_donate_Mariyaman.jpg/220px-Woman_uruvam_plate_for_donate_Mariyaman.jpg)
உடல் உபாதை தருகின்ற உடல் உறுப்புக்கள் சரியாகினால் இவ்வாறு அங்கமளிப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். அந்த உபாதை தீர்ந்ததும் அந்த உடல் உறுப்புக்கு ஏற்ற தகடுகளை வாங்கி காணிக்கையாக செலுத்துகிறார்கள். இந்த வழிபாட்டு முறை பெண் தெய்வ வழிபாட்டு முறைகளில் மட்டுமே காணப்படுகிறது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e1/Uruvangal_KanMalar_plates_to_donate_Mariyaman.jpg/220px-Uruvangal_KanMalar_plates_to_donate_Mariyaman.jpg)